Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: ஹிந்து மஹா வம்சம் அமைப்பின் சார்பாக ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடந்து வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க இரண்டு தண்ணீர் பந்தல்கள் ( நிருதி லிங்கம் முன்னர் பக்தர்கள் ஓய்வு அறை முன்புறம் மற்றும் உருண்டை சோறு கடை முன்னர்) அமைக்கப்பட்டு சுமார் 14,000 லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஆர்.வி.கௌரிசங்கர் தேசிய செயலாளர் ஆர்.எஸ்.எஸ்.சீனிவாசன், தேசிய பொருளாளர் ராஜேந்திரன், இந்துமத பாதுகாப்பு அணி மாவட்ட திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்